புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-07-26 21:12 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 72,078 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்த 87 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 37 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். அந்தவகையில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்