நாமகிரிப்பேட்டையில் ரூ.86 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் 1,950 மூட்டை மஞ்சள் ரூ.86 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2021-07-27 18:33 GMT
ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
அவற்றை சேலம், ஈரோடு, நாமகிரிபேட்டை, ஒடுவன்குறிச்சி உள்பட பல பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுத்தனர்.
ரூ.86 லட்சம்
விரலி ரகம் 1,500 மூட்டைகளும், உருண்டை ரகம் 400 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 569-க்கும் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 469-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சனாக ரூ.6 ஆயிரத்து 579-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7 ஆயிரத்து 302-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.13 ஆயிரத்து 889-க்கும், அதிகப்பட்சமாக ரூ.18 ஆயிரத்து 369-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,950 மூட்டை மஞ்சள் ரூ.86 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

மேலும் செய்திகள்