காவலாளி விஷம் குடித்து தற்கொலை

நெல்லை கலெக்டர் அலுவலக காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-27 18:48 GMT
நெல்லை:

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 45). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். காசி விஸ்வநாதன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட காசி விஸ்வநாதன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்