217 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்ேகாட்டையில் 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஒருங்கிணைப்புடன் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர் விஜயலட்சுமி மேற்பார்வையில் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நேற்று முகாமில் முதல் தவணையாக 175 பேருக்கும், 2-வது தவணையாக 42 பேருக்கும் என மொத்தம் 217 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.