வாய்க்காலில் மூழ்கி சிறுமி பலி

வாய்க்காலில் மூழ்கி சிறுமி பலியானது

Update: 2021-07-27 19:48 GMT
கிருஷ்ணராயபுரம்
கோயம்புத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சங்கீதா, மகள் காவியா (வயது 14), மகன் சர்வேஸ் ஆகிய 3 பேர் கரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று மதியம் பெரியப்பா கணேசன் குடும்பத்தினருடன், காவியா உள்ளிட்டோர் மாயனூர் பூங்காவிற்கு சென்று  சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தென்கரை வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது சிறுமி காவியா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். சிறுமியை அங்கிருந்தவர்கள், உறவினர்கள் மீட்டு புலியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் காவியா இறந்து விட்டாள். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்