நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2021-07-28 16:38 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 399 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

 இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 608 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 179 ஆனது. 

தற்போது 612 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 72 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 279 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்