தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை

ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2021-07-28 19:33 GMT
ராஜபாளையம். 
ராஜபாளையம் அம்பளபுளி பஜாரில் உள்ள குருசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 50). இவர் சலூன் கடை வைத்துள்ளார். இவர் திடீரென ராஜபாளையம் கருங்குளம் கண்மாய் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சுந்தர்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சுந்தர்ராஜிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவேதனையில் இருந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்