குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-28 19:58 GMT
நெல்லை:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்த பென்சிகர் மகன் இருதயதீபன் (வயது 31). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். 

இதையொட்டி கலெக்டர் விஷ்ணு நேற்று இருதயதீபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இருதயதீபனை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்