ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-28 20:05 GMT
நெல்லை:

நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வண்ணார்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட 18 மூட்டை 630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த காரில் இருந்த சாலைக்குமார் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்