பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-07-28 20:21 GMT
வரதராஜன்பேட்டை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் ஒன்றிய செயலாளர் கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்