ஊட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

ஊட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 16:13 GMT
ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதை பயன்படுத்தி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து ஊர் மக்கள் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்திக் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்