தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-29 18:14 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஒவிளிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி அட்சயா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு அட்சயா, வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெற்குப்பை இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 6 ஆண்டே ஆவதால் தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்