13 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகரில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-29 19:00 GMT
விருதுநகர்,ஜூலை
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 44 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 225 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 193 பேரும், சிகிச்சை மையங்களில் 12 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்