கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் கடைவீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பூவிழி (வயது 21). வீட்டில் இருந்த பூவிழியை கடந்த சில நாட்களாக காணவில்லையாம். இதையடுத்து அவரை பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.