அரூர் அருகே சாராயம் விற்றவர் கைது

அரூர் அருகே சாராயம் விற்றவர் கைது

Update: 2021-07-29 20:38 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அதில் எஸ்.பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 53) என்பவர்  அப்பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழரசன் சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழரசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்