சேலத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-29 20:56 GMT
சேலம்
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மண்டல போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க கோட்ட தலைவர் செம்பான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பட்ஜெட்டில் நகர்ப்புற போக்குவரத்து வசதிக்கு ஒதுக்கிய நிதியை, போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு பொது போக்குவரத்துக்கு எதிரான திட்டத்தை கைவிட வேண்டும். மின்சார பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதே போன்று சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்