பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-30 17:37 GMT
சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 65).நேற்று காலையில் இவர் வீட்டு வாசலை தெளித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில் இருந்து இறங்கிய 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அம்சவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர

மேலும் செய்திகள்