உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நடிகர் வடிவேலு குலதெய்வ கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Update: 2021-07-30 19:14 GMT
பரமக்குடி. 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காட்டுப் பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு அவர் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 பேர், அந்த கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை அந்தபகுதி மக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் சிக்கினார். 
அவரிடம் விசாரித்தபோது, 2 பேரும் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்ைத திருடியதாக கூறியுள்ளார். உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மொத்தம் ரூ.12 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பிடிபட்டது 17 வயது சிறுவன் என்றும், தப்பி ஓடியது விருதுநகர் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த நல்லூர் சேவகன் (வயது30) என்பதும் தெரியவந்தது. சிறுவனை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நல்லூர் சேவகனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்