தீக்குளித்து பெண் தற்கொலை

தேசூர் அருகே தீ்க்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-31 12:16 GMT
சேத்துப்பட்டு

தேசூர் அருகே தீ்க்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த நல்லடிசேனை கிராமத்தைச் சேர்ந்தவர் உஷல் (வயது 47). இவரின் மனைவி சுமதி (26). இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

 ஆனால் குழந்தை இல்லை. இதனால் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். கணவரின் துன்புறுத்தலால் மனவேதனை அடைந்த சுமதி பொன்னூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவார். மீண்டும் சுமதியை அழைத்து வந்து உஷல் குடும்பம் நடத்துவார். 

கடந்த 29-ந்தேதி இரவு வழக்கம்போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த சுமதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அதிகாலை 4 மணியளவில் தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததும் அவர் கூச்சலிட்டு அலறினார். 

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து சுமதியை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து சுமதியின் கணவர் உஷலை கைது செய்தார். மேலும் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்