தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-07-31 15:32 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்