கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-07-31 16:48 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.வைரவன்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி தலைமை தாங்கினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் ராஜ் மற்றும் செவிலியர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்