விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சாக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-31 17:23 GMT
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 25). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் வீட்டிலிருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர்.
 இதனால் மனம் உடைந்து விரக்தி அடைந்த பெருமாள் அரளி விதையை(விஷம்) அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்