பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-31 18:36 GMT
கரூர்
கரூர் டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமராவதி ஆற்றை ஒட்டிய பகுதியில் பணம் வைத்து சூதாடிய கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த ராசுகுட்டி (வயது 45), கிருஷ்ணமூர்த்தி (32), மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்