போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
மதுரை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 40). பிரபல மின்விசிறி நிறுவனத்தின் அதிகாரியான இவர் மதுரை திலகர் திடல் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக மின்விசிறி தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், அந்த தனியார் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் நேதாஜி ரோடு அனுமந்தராயர் கோவில் தெருவில் உள்ள தனியார் கம்பெனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.