பெண் தீக்குளித்து தற்கொலை

எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-01 16:27 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த வேல்முருகன் மனைவி தங்கம்மாள் (வயது 42). இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை வீட்டின் பின்புறம் வைத்து தங்கம்மாள் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்