நிலத்தகராறில் அடிதடி; ஒருவர் கைது

நிலத்தகராறில் அடிதடி ஏற்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-01 19:21 GMT
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள பொரணி கும்மாயம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (53). இந்தநிலையில் சண்முகத்தின் தாத்தா வெள்ளைய கவுண்டர் என்பவரின் பெயரில் இருந்த 3 ஏக்கர் நிலத்தை செல்வம் ஏமாற்றி தனது மனைவி தமிழரசி பெயருக்கு பட்டா மாற்றியுள்ளதாக கூறி சண்முகம் தகராறில் ஈடுபட்டு செல்வத்தை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், வெள்ளிணை போலீசார் வழக்குப்பதிந்து, சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்