ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்தங்கலில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-01 19:42 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு காணாமல் போனது. இது குறித்து பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேதிலால் (30), ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்