வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-01 19:44 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி 6-வது குறுக்கு தெரு மற்றும் 7-வது குறுக்குத் தெருவில் செல்வராஜ், கலாவதி மற்றும் தனசேகர், பவுணம்பாள் ஆகியோரது வீடுகளில் இருந்த பணம், நகை மற்றும் பத்திரங்களை 2 பேர் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் வாகன சோதனையின் போது 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த கமலஹாசன், மாரிமுத்து என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் செங்குந்தபுரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் ஓட்டை பிரித்து பணம், நகைகளை திருடியது அவர்கள்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து கமலஹாசன் (வயது 46), மாரிமுத்து (30) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்