சாராயம் காட்சிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சாராயம் காட்சிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-08-02 17:45 GMT
புதுக்கோட்டை, ஆக.3-
கந்தர்வகோட்டை அருகே பகட்டுவான் பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது34). நாயக்கர்பட்டி பகுதியில் சாராயம் காட்சியது தொடர்பாக பிரபுவை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த போலீசார் பிரபுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்