பஸ் மோதி பெண் பலி

பஸ் மோதி பெண் பலி

Update: 2021-08-02 18:05 GMT
சாயல்குடி
கடலாடி அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மனைவி வள்ளி (வயது 48). இவர் கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் காளிமுத்துவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்