கொரோனா தடுப்பூசி முகாம்

லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-08-02 19:04 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுகாதார துறையின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் அரசு மருத்துவர் அன்புசெல்வன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் சுகாதார குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டனர். இதில் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்