செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 127 பேர் பாதிப்பு; 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-08-03 05:52 GMT
இவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 647 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,405 ஆக உயர்ந்துள்ளது. 1,163 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,204 பேர் உயிரிழந்துள்ளனர். 439 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்