திருவல்லிக்கேணியில் வாலிபர் படுகொலை 3 பேர் வெறிச்செயல்

திருவல்லிக்கேணியில் வாலிபர் படுகொலை 3 பேர் வெறிச்செயல்.

Update: 2021-08-03 11:00 GMT
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி டுமில்குப்பம் பகுதியைச்சேர்ந்தவர் பூபாலன் (வயது 27). இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று மாலையில் பூபாலன் மாநில கல்லூரிக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் தனது நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். போதையில் இருந்த அவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் பூபாலன் அரிவாளால் வெட்டப்பட்டார். அவரது தலையில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். அவரை வெட்டி கொலை செய்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் போலீஸ் படையுடன் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட பூபாலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணாசதுக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

பூபாலனை கொலை செய்தது 3 பேர் என்று தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பூபாலன் மீது கொலை, திருட்டு உள்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டது முன் விரோதத்தால் அல்ல என்றும், குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்