தகராறில் கீழே விழுந்த வாலிபர் சாவு

தகராறில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-03 21:30 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வெங்கடேசன்(வயது 24) உள்பட 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உண்டு. இதில் வெங்கடேசன் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கும், அவரது அண்ணன் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வெங்கடேசன் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்