கொந்தகை அகழாய்வில் மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுப்பு

கொந்தகை அகழாய்வில் மரக்கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-08-05 17:40 GMT
மானாமதுரை,ஆக
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கீழடி அகழாய்வில் இது வரை 1000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒரு குழியில் இருந்த முதுமக்கள் தாழியில் மரக் கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கிடைத்துள்ளது. கைப்பிடி 6 செ.மீ. நீளமும், வாள் 40 செ.மீ. நீளமும் இருக்கின்றன. மேலும் அந்த முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் பாத்திரங்களும் இருந்தன.
ஆய்வுக்காக இந்த வாள் அமெரிக்கா புளோரிடாவின் பீட்டா அனாலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்