22 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,ஆக.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 26 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253ஆக உள்ளது.