சாலையில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம்

இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-06 18:58 GMT
ராஜபாளையம்,ஆக
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் செல்லும் வழியில் உள்ள கோபாலபுரம் பஸ் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 75), சுப்புரத்தினம் (58), சுப்புலட்சுமி (65), பரமசிவம் (73) ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தியதாக எம்.பி.கே.புதுப்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்