பஞ்சவடீ கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

பஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-06 19:11 GMT
வானூர், ஆக.7-
பஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் பஞ்சவடீயில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா பரவலை தடுக்க வருகிற 23-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலில் நடை அடைக்கப்படுகிறது. 
எனவே அந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்