தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் மழை

தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் மழை பெய்தது.

Update: 2021-08-07 20:40 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை வானில் மேகங்கள் திரண்டு இருள்சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் லேசான குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதேநேரத்தில் நவரை பட்டத்தில் அறுவடை நடைபெற்று வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க நெல் குவியலை மூடி வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் கோடாலிக்கருப்பூர், காரைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் நெல்மணிகள் மழையில் நனைந்தபடி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதேபோல்  ஜெயங்கொண்டம் பகுதியில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்