ஆம்னி பஸ் பறிமுதல்

தென்காசியில் ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-07 20:49 GMT
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்சை வழிமறித்து ஆவணங்களை சோதனை செய்தார். இதில் நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட அந்த பஸ்சை தமிழகத்தில் இயக்குவதற்கு சாலைவரியை செலுத்தாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து, தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்