படப்பையில் பண்ணை சார்ந்த தொழில் பயிற்சி முகாம்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதற்கு மகளிர் திட்டத்தின் மூலம் பயிற்சி முகாம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் வால்டர்பால் ஆகியோர் தலைமை தாங்கினர்.

Update: 2021-08-08 10:46 GMT
பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, கறவை மாட்டினங்கள் மற்றும் தேர்வு முறைகள், மண்புழுஉரம், தயாரித்தல் உள்ளிட்ட 18 வகையான பயிற்சி அளிக்கப்பட்டது. குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 
ஊராட்சிகளை சேர்ந்த 84 மகளிர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில் வட்டார மேலாளர் எலிசபெத் ராணி, வேளாண் உதவி திட்ட அலுவலர் பவுன்ராஜ், என்ஜினீயர் பரிமளா தேவி, துணை வட்டார வளர்ச்சி 
அலுவலர் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்