உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-08-08 17:37 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவீரன்(வயது 20). இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது முனிவீரன் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மாணவியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் முனிவீரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்