தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-09 14:44 GMT
கோவை

எல்.ஐ.சி., வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது 

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் கைகளில் சங்கக்கொடிகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், தங்கவேல், செல்வராஜ், எல்.பி.எப் சங்க ரத்தினவேல், ஐ.என்.டி.யு.சி. சண்முகம், எம்.எல்.எப். மணி, தமிழ்ச்செல்வன், எச்.எம்.எஸ். சங்கம ராஜாமணி, வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்