சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Update: 2021-08-09 17:39 GMT
பொன்னமராவதி ஆக.10-
பொன்னமராவதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விக்ரம் (வயது 21). இவர் 17 வயது சிறுமியை காதலித்து பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்தார். இதனால் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, விக்ரம் மறுத்துள்ளார். இந்நிலையில் விக்ரம் பொன்னமராவதி பிடாரியம்மன் கோவிலுக்கு அந்த சிறுமியை வரவழைத்து திருமணம் செய்ய வலியுறுத்தினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து அறந்தாங்கி கிளை சிறையில்அடைத்தனர்.

மேலும் செய்திகள்