முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை தாசில்தார் தனராஜ் உத்தரவின்பேரில் வெம்பக்கோட்டை மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆலங்குளத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார். ஆய்வின் போது ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் பொன்மாரியப்பன், ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், கிராம உதவியாளர் ஜான் கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.