முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்,
தமிழகத்தில் 37 முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்கக்கல்வி இயக்குனரக துணைஇயக்குனர் மகேஸ்வரி, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.