போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது.

Update: 2021-08-13 17:34 GMT
ஊட்டி,

ஊட்டி அருகே கப்பச்சி கிராமத்தில் உள்ள மதுரைவீரன் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 25). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த சிறுமி ஊட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது சந்தோஷ் ஆசை வார்த்தை கூறி அவினாசிக்கு கடத்தி சென்று, அவளை திருமணம் செய்து கொண்டார். 

மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவள் கர்ப்பிணியாகி இருக்கிறாள். இந்தநிலையில் அவளது உறவினர்கள் சைல்டு லைன் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்