கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-08-13 18:24 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (வயது 24). இவருக்கும், தச்சநல்லூர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கார்த்திக் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சரண்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, சரண்யாவின் கணவர் கார்த்திக், மாமியார் மாரியம்மாள் மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்