அன்னவாசல்
புதுக்கோட்டை அருகே ஆயிங்குடி கிராமத்தில் நேற்று குளத்தில் குளித்து கொண்டிருந்த ஆதி என்கிற ஆதித்யன் (வயது12) திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து சென்றனர். இறந்த சிறுவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடததி வருகின்றனர்.