ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 189 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.